நேற்று முன்தினம் இரவு தொடக்கம் பெய்து வரும் பெரு மழை காரணமாக வடமாராட்சி கிழக்குப் பகுதியை சேர்ந்த 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் தங்கியுள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நேற்று மாலை வரை எந்தவிதமான உதவிகளும் வழக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். ஒயாத மழை காரணமாக சிறுவர்கள்
> முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடந்து பெய்யும் மழையால் ஏற்பாட்டுள்ள குளிரால் இவர்கள் பெரும் சிரமம் அடைவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வீடுகளை முற்றாக இழந்துள்ள நிலையில் தற்காலிக கொட்டில்களில் இவர்கள் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பெய்துள்ள அடைமழை மக்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நேற்று மாலை வரை எந்தவிதமான உதவிகளும் வழக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். ஒயாத மழை காரணமாக சிறுவர்கள்
> முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடந்து பெய்யும் மழையால் ஏற்பாட்டுள்ள குளிரால் இவர்கள் பெரும் சிரமம் அடைவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வீடுகளை முற்றாக இழந்துள்ள நிலையில் தற்காலிக கொட்டில்களில் இவர்கள் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பெய்துள்ள அடைமழை மக்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment